சென்னை பிராட்வேயில் உள்ள பேருந்து நிலையம் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக, பராமரிப்பின்றி காணப்படுகிறது. பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி, கழிப்பிடமாக மாறி துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை நீடிக்கிறது. எனவே, இப் பேருந்து நிலையத்தை சீரமைப்பதோடு, கழிக்க கட்டணக் கழிப்பிடம் அமைப்பதற்கு போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ஆர்.இரவீந்திரன், ஆவடி.