சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழல்குடை அமைக்கப்படாததால், முதியோர், பெண்கள் உள்ளிட்ட பயணிகள் பேருந்துக்காக எங்கு காத்திருப்பது தெரியாமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த இடத்தில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கவும், இதைபோல, திருவான்மியூர் எஸ்-2 திரையரங்கம் அருகிலும், அடையாறு பேருந்து நிலையத்தின் எதிரிலும் புதிய நிழற்குடைகளை அமைக்கவும் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.