சென்னை, பூங்கா நகர் பகுதி, காளப்ப ஆச்சாரி தெருவில் உள்ள குடிநீர் குழாயில், பல நாட்களாக கழிவுநீரும் கலந்து வருகிறது. இதனால், இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரக் கேடும், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் பலனில்லை. எனவே, இதுதொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைத் தடுக்க முன் வர வேண்டும்.
கே.ஆர்.இரவீந்திரன், சென்னை-1.