ஆராய்ச்சிமணி
தபால் பெட்டி வைக்கப்படுமா?
சென்னை மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பட்ரோடுக்கும் முகலிவாக்கத்துக்கும் இடையே, அண்மைக் காலமாக, ஏராளமான புதுப்புது குடியிருப்புகள் தோன்றி வருகின்றன.
சென்னை மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பட்ரோடுக்கும் முகலிவாக்கத்துக்கும் இடையே, அண்மைக் காலமாக, ஏராளமான புதுப்புது குடியிருப்புகள் தோன்றி வருகின்றன. இங்கு வசிக்கும் மக்களுக்கு போதிய போக்குவரத்து வசதிகளோ, அஞ்சலக வசதிகளோ இல்லை. தபால்களை அனுப்புவதற்காக, வெகுதொலைவிலுள்ள கோவூர், போரூர், முகலிவாக்கம் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. மக்களின் நலன் கருதி, ராமகிருஷ்ணா நகர், ஸ்ரீகணேஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மையத்தில் தபால் பெட்டி ஒன்றை வைக்க, அஞ்சல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.விஜயலட்சுமி, கொளப்பாக்கம்.