தெரு விளக்குகள் எரியுமா?

பெருநகர சென்னை மாநகராட்சி, 108-ஆவது வார்டு, அமைந்தகரை அய்யாவு நாயுடு காலனியில் தெரு விளக்குகள் ஒளிர்ந்து பல மாதங்களாகின்றன

பெருநகர சென்னை மாநகராட்சி, 108-ஆவது வார்டு, அமைந்தகரை அய்யாவு நாயுடு காலனியில் தெரு விளக்குகள் ஒளிர்ந்து பல மாதங்களாகின்றன. இதனால், இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சாலையின் மேடு, பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து செல்கின்றனர். மேலும், வழிப்பறி , பெண்களைக் கேலி செய்யும் சம்பவங்களும் தொடர்கின்றன. இதுகுறித்து, அம்மா கைப்பேசி எண்ணையும், பெருநகர மாநகராட்சி புகார் எண்ணையும் பலமுறை தொடர்பு கொண்டு தகவல் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இப்பகுதியில் இரவு நேரங்களில் தெரு விளக்குகளை ஒளிரச்செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 கோதை ஜெயராமன், அரும்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com