சென்னை, மடிப்பாக்கத்தில் உள்ள அருட்பெருஞ்சோதி சாலையில், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக பல இடங்களில் சாலையைத் தோண்டப்பட்டுள்ளது. குழாய்கள் பதித்த பிறகு, அந்தப் பள்ளங்களை சரியாக மூடாததால், சாலையின் நடுவில் ஆங்காங்கே மணல் குவியல்களாகவும், மேடு பள்ளமாகவும் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகளும், பள்ளி செல்லும் மாணவ மாணவிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே, இந்தப் பள்ளங்களை முறையாக மூடி, சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.எஸ்.இப்ராஹிம், சென்னை-91.