சென்னை, அடையாறு, இந்திரா நகரில் ரயில் நிலையம் உள்ளது. இங்கு செல்வதற்கு வழிகாட்டிப் பலகைகள் இல்லாததால், பயணிகள் வருகை மிகவும் குறைந்து போனது. அதனால், அடையாறு டிப்போ சிக்னல், இந்திரா நகர் சிக்னல், ரயில் நிலையம் செல்லும் பாதை உள்ளிட்ட இடங்களில் வழிகாட்டி பலகைகளை அமைத்தால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, இதுதொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.