சென்னை பாடி லூகாஸ் சந்திப்பில் தானியங்கி சிக்னல் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுவதில்லை. மேலும், போக்குவரத்துக் காவலர்களும் பெரும்பாலான நேரங்களில் இங்கு நிற்பதில்லை. இதனால் வாகனங்கள் தாறுமாறாகச் செல்வதோடு, பொதுமக்களால் சாலையைக் கடக்க முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் பலனில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தானியங்கி சிக்னலை சரிசெய்ய வேண்டும் அல்லது இந்த இடத்தில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும்.
-வி.சிவநேசன், கொரட்டூர்.