அம்பத்தூர் பகுதியில் ஸ்டெட் ஃபோர்டு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் மாநகரப் பேருந்துகள் நின்று செல்கின்றன. ஆனால், இந்த நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் மக்கள் வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டியுள்ளது. எனவே, இங்கு நிழற்குடை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.வெங்கடாஜலபதி,
திருமுல்லைவாயில்.