சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் தெருக்களில் சுற்றித் திரிந்த நூற்றுக்கணக்கான தெரு நாய்களுக்கு அண்மையில் கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டது. இது வரவேற்கத்தக்கது. எனினும், கருத்தடை சிகிச்சைக்குப் பிறகு தெரு நாய்களை, அவை ஏற்கெனவே இருந்த தெருக்களிலேயே கொண்டு விடப்பட்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் நாய்கள் கும்பலாக குரைப்பதும், கடிக்க முயலுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே, தெரு நாய்களை அகற்ற பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.எஸ்.இப்ராகிம், மடிப்பாக்கம்.