கிண்டியிலிருந்து சைதாப்பேட்டை மசூதி தெரு, கொத்தவால்சாவடி தெரு, ஜாபர்கான்பேட்டை, காசி மற்றும் உதயம் தியேட்டர் வழியாக அசோக் பில்லர், மெட்ரோ ரயில் நிலையம் வரை செல்லும் எஸ்35 பேருந்து மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து என்ற அளவில் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. பயணிகள் நலனைக் கருத்தில் கொண்டு அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரா.எத்திராஜன்,
சைதாப்பேட்டை மேற்கு.