சென்னை அடையாறு பணிமனை வாயில் அருகே பயணிகள் சிறுநீர் கழித்து வந்த இடத்தில் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு நிலவியது. இதுகுறித்து தினமணி ஆராய்ச்சி மணி பகுதியில் செய்தி வெளியானது. தற்போது அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு பஸ் பாஸ் கொடுக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினமணிக்கும் பாராட்டு, நன்றி.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.