முகப்பு ஸ்பெஷல்ஸ் ஆராய்ச்சிமணி
புதை சாக்கடை பள்ளத்தை மூட வேண்டும்
By DIN | Published On : 07th October 2019 05:05 AM | Last Updated : 07th October 2019 05:05 AM | அ+அ அ- |

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14 வார்டு 187-க்கு உள்பட்ட மடிப்பாக்கம் பிரதான சாலையின் நடுவே உள்ள புதை சாக்கடை ஜங்ஷன் அருகே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதனால், அப்பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயமுள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் புதை சாக்கடை அருகே இருக்கும் பள்ளங்களை மூடி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.