பேருந்து வசதி வேண்டும்
By DIN | Published on : 07th October 2019 05:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெரம்பூரில் திரு.வி.க.நகர் நிறுவப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனைச் சுற்றி ராமமூர்த்தி காலனி, அன்பழகன் நகர், கிருஷ்ணா நகர், வெற்றி நகர் என பல நகர்கள் உருவாகி குடியிருப்புகள் பெருகி விட்டன. ஆனால், இங்கிருந்து அண்ணா சதுக்கம், பெசன்ட் நகர், தியாகராயநகர், திருவேற்காடு போன்ற பகுதிகளுக்குச் செல்ல நேரிடையான பேருந்து வசதிகள் இல்லை. இந்த தடத்தில் மாநகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
ஆ.ஜெயகிருஷ்ணன், திரு.வி.க.நகர்.