பேருந்து நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகள்
By DIN | Published on : 14th October 2019 03:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சென்னை ஈஞ்சம்பாக்கம் பிரார்த்தனா தியேட்டர் எதிரே உள்ள பெத்தேல் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பயணியர் நிழற்குடையில் எந்தப் பேருந்தும் நிற்பதில்லை.
ஷேர் ஆட்டோக்களையே நாடும் நிலையில் மக்கள் உள்ளனர். இதனால் முதியோர், பெண்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல மாநகரப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.