விரைந்து முடிக்க வேண்டும்

வேளச்சேரி-பரங்கிமலை துரித ரயில் சேவை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். பல ஆண்டுகளாக இச்சேவைக்காக ரயில் பயணிகள் காத்திருக்கின்றனர். வேளச்சேரியில் இருந்து

வேளச்சேரி-பரங்கிமலை துரித ரயில் சேவை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். பல ஆண்டுகளாக இச்சேவைக்காக ரயில் பயணிகள் காத்திருக்கின்றனர். வேளச்சேரியில் இருந்து ஆதம்பாக்கம் வரை ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்திட்டத்தில் ரயில் நிலைய கட்டடங்களின் கட்டுமானப் பணி நிறைவுற்றாலும், நடைமேடை, ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
 இப்பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், செங்கல்பட்டில் இருந்து வேளச்சேரிக்கும், சென்னை கடற்கரைக்கும் விரைவு ரயில்களை இயக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையையும் ரயில்வே நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும்.
 எஸ்.கோபாலன், மறைமலை நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com