செங்கத்திலிருந்து தளவாநாய்க்கன்பேட்டை செல்லும் பகுதியில் ஓடும் செய்யாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. பழுதடைந்த பாலத்தைக் கடந்து செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனா். ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்கின்றனா்.
ஆ.சரவணன், செங்கம்