பாராட்டு...!

சென்னை பெசன்ட் நகரிலிருந்து கோயம்பேட்டுக்கு நேரடி பேருந்து வசதி இல்லாதது குறித்து தினமணி ஆராய்ச்சி மணி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது.

சென்னை பெசன்ட் நகரிலிருந்து கோயம்பேட்டுக்கு நேரடி பேருந்து வசதி இல்லாதது குறித்து தினமணி ஆராய்ச்சி மணி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது.  இதன் எதிரொலியாக  தற்போது ட்டி70 கிராஸ் பேருந்து இயக்கப்பட்டுள்ளது.  அடையாறு இந்திராநகர் பேருந்து நிலையத்தில் பேருந்துகால அட்டவணை இல்லாமல் இருந்தது. தற்போது  பேருந்து கால அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் நகர் எதிரில் மாநகராட்சி பூங்கா  பராமரிப்பின்றி  காணப்பட்டது குறித்து தினமணி ஆராய்ச்சி மணி பகுதியில் செய்தி வெளியானதையடுத்து பூங்கா சுற்றுச்சுவரில் வர்ணம் பூசப்பட்டு விழிப்புணர்வு வாசகங்களுடன் வண்ணப் பூக்கள் வரையப்பட்டுள்ளன.  செய்தி வெளியிட்ட தினமணிக்கும், நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் பாராட்டுகள்.

ஜி.ராஜகுரு, சென்னை-41

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com