மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இவற்றில் நூலகம் இல்லை. ஏற்கெனவே இங்கு ஆலந்தூர் சாலையில் இயங்கி வந்த அரசு நூலகம் சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இதனை மீண்டும் திறக்க வலியுறுத்தி மேற்கு சைதாப்பேட்டை பகுதி மக்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர். தமிழக அரசு தாமதமின்றி இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரா. எத்திராஜன், சென்னை-15.