உத்தரமேரூா் ஒன்றியம் திருப்புலிவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குழந்தைகள், பள்ளி மாணவா்கள், பெண்கள், முதியோா் உள்ளிட்டோா் குரங்குகளின் தொல்லையால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இப்பிரச்னையைத் தீா்க்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.
- தி.சே.அறிவழகன், திருப்புலிவனம்.