வாகனங்கள் பெருக்கம் நிறைந்துள்ள சென்னை மாநகரில் இயக்கப்படும் பெரும்பாலான வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் காற்று மாசடைந்து மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், பல வாகனங்களில் பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட ஒலிப்பான்களால் ஏற்படும் ஒலி மாசு மக்களில் செவித்திறனை பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, போக்குவரத்து காவல் துறை இவற்றைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.ராம்குமார், சென்னை-1.