சென்னை மடிப்பாக்கம் நகரின் பிரதான சாலையிலிருந்து பிரியும் கிளைச் சாலைகளின் சந்திப்புகளில் சிறு மழை பெய்தாலே போதும் மழைநீர் குளம்போல தேங்கி விடுகிறது. குறிப்பாக நேரு சாலை-அண்ணா தெரு முனை-இறைச்சிக் கடை சாலை சந்திப்புகளில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். மழைநீர் வடியும் வகையில் கால்வாய்களை துரிதகதியில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை-91.