ஆவடி பெருநகராட்சி அண்மையில் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்குள்ள ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு சேகரமாகும் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படாததால் சுகாதாரச் சீர்கேடு, கொசுத் தொல்லை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையைத் தீர்க்க ஆவடி மாநகராட்சி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.வெங்கடகிருஷ்ணன், கோவில்பதாகை.