தாம்பரம் அருகில் உள்ள பெருங்களத்தூர் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதன் மேற்குப் பகுதியில் உள்ள பாரதி அவென்யூவைச் சுற்றி ஏராளமான நகர்கள் உருவாகி, ஆயிரக்கணக்கான மக்கள் குடியேறி வருகின்றனர். ஆனால், இந்தப் பகுதியில் தனியார் மருத்துவமனை கூட இல்லை. எனவே இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.எஸ்.வெங்கடேசன், பெருங்களத்தூர்.