சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம் பகுதிக்கு போதிய அளவில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், அலுவலக நேரம், இரவு நேரங்களில் பொதுமக்கள் சிரமப்படும் நிலை தொடர்கிறது. தற்போது இயங்கிவரும் பேருந்துகளும் சொகுசுப் பேருந்துகளாகவே இயக்கப்படுகின்றன. எனவே, ஈஞ்சம்பாக்கம் வரை கட் சர்வீஸ் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம். பூபதி, ஈஞ்சம்பாக்கம்.