சென்னை மாநகராட்சியில் 108 -ஆவது வட்டம், என்.எஸ்.கே. நகர் பேருந்து நிறுத்தம் அருகே மாடியில் விடிய, விடிய மது விற்பனை நடைபெறுகிறது. இதனால், காலை வேளையில் பெரு நிறுவனங்களில் வேலை செய்வோர், பூக்கடைக்கு செல்லும் பெண்கள், பொதுமக்கள், இளம் பெண்கள் மதுக்குடிப்பவர்களால் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகும் நிலை தொடர்கிறது. இது குறித்து அமைந்தக்கரை (கே3) காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மாநகர காவல் ஆணையர் இப்பகுதியில் திடீர் ஆய்வு நடத்தி உண்மை நிலையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காமாட்சி கிருஷ்ணன், சென்னை.106.