குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுமா...?

ஆவடி மாநகராட்சி ஜே.பி.எஸ்டேட், சரஸ்வதி நகர் குடியிருப்பு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.

ஆவடி மாநகராட்சி ஜே.பி.எஸ்டேட், சரஸ்வதி நகர் குடியிருப்பு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இப்பகுதிகளில், வீடுகளில் சேரக்கூடிய குப்பைகளை கொட்டும் வகையில், டம்பர் பிளேசர் எனப்படும் குப்பை தொட்டி வைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்ட வழியின்றி, வீடுகளில் 2, 3 நாள்களுக்கு சேர்த்து வைத்து அருகேயுள்ள ரெமி தியேட்டரில் கொட்டக்கூடிய நிலை தொடருகிறது. எனவே, ஆவடி மாநகராட்சி நிர்வாகம் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும்.

எஸ்.வைத்தியநாதன், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com