பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மடிப்பாக்கம் கூட் ரோட்டில் சிக்னல் விளக்குகள் அமைக்கப்படவில்லை. மேலும், இந்தச் சந்திப்பில் காவலர்கள் யாரும் நிற்காததால் வாகனங்களால் விபத்துகள் நிகழும் அபாயம் உள்ளது. மேலும், முதியோரும் பாதசாரிகளும் சாலைகளைக் கடக்க முடிவதில்லை. எனவே இப்பகுதியில் சிக்னல் அமைத்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
எம்.எஸ்.இப்ராகிம்,
மடிப்பாக்கம்.