சென்னையின் பல இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் எந்தெந்த தடம் எண் பேருந்துகள் நிற்கும் என்ற அறிவிப்புப் பலகைகள் இல்லை. சில இடங்களில் நிழற்குடைகளே இல்லை. இதனால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். திருவொற்றியூர் தேரடி பேருந்து நிறுத்தத்தில் உள்ள காலி மைதான மேற்கூரையின் சிமெண்ட் சீட் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்தப் பக்கம் செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். மாநகரப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.கே.ஈஸ்வரன்,
திருவொற்றியூர்.