சென்னை நீலாங்கரையில் இருந்து அஷ்டலட்சுமி கோயில், பாம்பன் சுவாமி கோயில், அறுபடை வீடு முருகன் கோயில் வழியாக பெசன்ட் நகர் வரை இயக்கப்பட்டு வந்த மினி பஸ் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. அதேபோல, மயிலாப்பூரில் இருந்து மேடவாக்கத்துக்கு இயக்கப்பட்ட தடம் எண்.எம்}15 மாநகரப் பேருந்தும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பக்தர்களும் பொதுமக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பேருந்துகளை மீண்டும் இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.