சென்னை, அண்ணா நகர் தொகுதிக்குட்பட்ட அரும்பாக்கம் பகுதியில் வரும் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனையின் பின்புறத்தில் அழுகிய காய்கறிகள், பழங்கள் கொட்டப்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோயாளிகள் அவதியுறுகின்றனர். எனவே அப்பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
எஸ்.பழனி, அண்ணா நகர் கிழக்கு