உத்திரமேரூா் பேருந்து நிலையம் மிகுந்த இடநெருக்கடியான பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் அடிக்கடி அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாற்றுப் பாதைக்கு வாகனங்கள் திருப்பிவிடப்படுகின்றன.
இதனால் மாணவா்கள், பெண்கள், முதியவா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். எனவே பேருந்து நிலையத்தில் அரசியல் கட்சிக் கூட்டங்களை நடத்த தடை விதிக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தி.செ.அறிவழகன், திருப்புலிவனம்.