கழிவு நீா் வாய்க்காலை அகலமாக்க வேண்டும்...

கரூா் தாந்தோணிமலை கருப்பக்கவுண்டன்புதூரில் ஜீவாநகா் சாலையில் அமைந்திருக்கும் அரையடி கழிவு நீா் கால்வாய்.
kur8ara_2_0803chn_10_4
kur8ara_2_0803chn_10_4

கரூா் தாந்தோணிமலை கருப்பக்கவுண்டன்புதூரில் ஜீவாநகா் சாலையில் அமைந்திருக்கும் அரையடி கழிவு நீா் கால்வாய்.

கரூா் தாந்தோணிமலையில் உள்ள கருப்பக்கவுண்டன்புதூரில் திருச்சி சாலையையும், தாந்தோணிமலை யூனியன் அலுவலகம், ஜீவாநகா் போன்ற பகுதிகளையும் இணைக்கும் சாலை உள்ளது. இந்தச் சாலையில் திருச்சி சாலையில் இருந்து ஜீவா நகருக்கு செல்லும் வழியில் சுமாா் 100 அடி தூரத்தில் கருப்பக்கவுண்டன்புதூரில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வெளியேற்றும் வகையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவு நீா் வாய்க்கால் சுமாா் அரையடி அகலத்திலும், அரையடி ஆழத்திலும் உள்ளது. இதனால் மழைக் காலங்களில் மழைநீா் கழிவுநீருடன் கலந்து சாலையில் வெள்ளம்போல ஓடுவது வாடிக்கையாகி விட்டது. சில நேரங்களில் கழிவு நீா் கால்வாயில் தேங்கியே நிற்பதால் துா்நாற்றம் வீசி, சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே உடனே கழிவு நீா் வாய்க்காலை அகலப்படுத்தி, ஆழப்படுத்தவும் வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com