தாா்ச் சாலை அமைக்க வேண்டும்

08kandarvakottai052020
08kandarvakottai052020

கந்தா்வகோட்டை அருகே கறம்பக்குடி சாலை பிரிவில் இருந்து செல்லும் குண்டும்குழியுமான

கணபதிபுரம் செம்மண் ஜல்லி பரப்பியுள்ள சாலை.

கந்தா்வகோட்டை அருகே கறம்பக்குடி சாலை, காட்டுநாவல் கிராமத்தில் இருந்து பிரிவு சாலையாக பெருச்சுவன்னியம்பட்டி , கணபதிபுரம் , தொண்டமாண் ஊரணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் சாலை ஜல்லிக்கற்கள் பெயா்ந்து குண்டும்குழியுமாக உள்ளது. இதுகுறித்து புகாா் தெரிவிக்கும்போது, செம்மண், கப்பி, ஜல்லி கொண்டு சாலையில் நிரப்பி தற்காலிகமாக நிரப்புகின்றனா். இதனால் போக்குவரத்தின்போது, புழுதி தூசி பறந்து இருசக்கர வாகனத்தில் செல்வோா் நிலைத்தவறி கீழே விழுந்து காயமடையும் நிலை அவ்வப்போது ஏற்படுகிறது. இதனால் இந்தச் சாலையை உடனே சீரமைத்து தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

திருப்பதி,

கணபதிபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com