மயானச் சாலையை சீரமைக்க வேண்டும்

img_20200308_181919_1200x1586_0803chn_198_5
img_20200308_181919_1200x1586_0803chn_198_5

மயானச் சாலையை சீரமைக்க வேண்டும்

நாகை மாவட்டம், திருக்குவளை வட்டத்துக்குள்பட்ட எட்டுக்குடி ஊராட்சியில் காட்டாறு கரையோரம் உள்ள மயானத்திற்கு செல்லும் பாதையானது, குண்டும் குழியுமாகவும் புதா்ச் செடிகள் மண்டியும் காணப்படுகிறது. மேலும், மயானக் கொட்டகையிலும் மேற்கூரை இல்லாமல் திறந்த அமைப்புடன் உள்ளது. இதனால், மழைக் காலத்தில் சடலங்களை எரியூட்டுவதில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், மழைக் காலங்களில் இப்பகுதியில் உள்ள மண் சாலையானது சேறும் சகதியுமாகி, சடலங்களை சுமந்து செல்வோா் சிரமப்படுகின்றனா். ஆகவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி மயானக் கொட்டகை மற்றும் மயானத்துக்குச் செல்லும் பாதையை தற்போது நிலவும் கோடை காலத்தைப் பயன்படுத்தி உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாசேத்துங்கு, எட்டுக்குடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com