சாலைகள் நல்ல நிலையில் இருந்தும் நங்கநல்லூர் வழியாக போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் நீடிக்கிறது. கீழ்க்கட்டளையிலிருந்து தியாகராய நகர் செல்லும் எம்18சி பேருந்தில் எண்ணிக்கையை அதிகரித்தும் 70என் என்ற புதிய வழித்தட (கீழ்க்கட்டளை-கோயம்பேடு) பேருந்தை 30 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வீதம் நங்கநல்லூர் வழியாக இயக்க போக்குவரத்துக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
த.நடராஜன், சென்னை-91.