சோழிங்கநல்லூரில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து திருவான்மியூர், அடையாறு, சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் பயணிக்கின்றனர். இந்த இடத்தைச் சுற்றி ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இருப்பதால், அதிகமான பெண்கள் இந்தப் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இங்கு கழிப்பிட வசதி இல்லாததால் பயணிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, இங்கு கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும்.
அ.மா.பழனிச்சாமி, போலச்சேரி.