ஆவடி மாநகராட்சியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் கிளை நூலகம் உள்ளது. இதை காமராஜர் நகர், ஜே.பி.எஸ்டேட், வசந்தம் நகர், மூர்த்தி நகர், கோவர்த்தனகிரி, பருத்திப்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாசகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிகமான பயன்பாட்டில் இருக்கும் இந்நூலகத்தை தனி கட்டடம் அமைத்து முழு நேர நூலகமாக தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ். வைத்தியநாதன், ஆவடி.