சிக்னல் சீரமைக்கப்படுமா?

சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயம் அருகிலுள்ள தானியங்கி சிக்னல்  இயங்காததால், வாகன ஓட்டிகள்  போக்குவரத்து விதிகளை மீறி கட்டுப்பாடின்றி செல்கின்றனர்.


சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயம் அருகிலுள்ள தானியங்கி சிக்னல்  இயங்காததால், வாகன ஓட்டிகள்  போக்குவரத்து விதிகளை மீறி கட்டுப்பாடின்றி செல்கின்றனர். இதனால், அவ்வப்போது விபத்துகளும் நேரிடும் அவலம் தொடர்கிறது. எனவே, இந்த சிக்னலை சீரமைத்து போக்குவரத்து காவலரையும் பணியமர்த்த வேண்டும். மேலும், இப்பகுதியிலுள்ள பயணிகள் நிழல்குடை அருகே அனைத்துப் பேருந்துகளை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி. ராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com