பகுதி - 329

பூமியும் பெரிய மேருமலையும் அதிரும்படியும்; ஆதிசேடனுடைய பணா மகுடங்கள் நடுங்கி அசையும்படியும்;

பதச் சேதம்

சொற் பொருள்

கடிய வேகம் மாறாத விரதர் சூதர் ஆபாதர் கலகமே செய் பாழ் மூடர் வினை வேடர்

 

கடியவேகம்: கடுமையான கோபம்; மாறாத விரதர்: கோபம் மாறாமல் அதையே விரதமாகக் கொண்டிருப்போர்; ஆபாதர்: கீழ்மக்கள்; வினைவேடர்: தீவினைகளையே நாடுவோர்;

கபட ஈனர் ஆகாத இயல்பு நாடியே நீடு கன விகாரமே பேசி நெறி பேணா

 

கபட: வஞ்சக; ஈனர்: இழிந்தோர்; ஆகாத இயல்பு: ஆகாத குணங்களை; நீடு: நெடிய; கன: வலிமையுள்ள; விகாரம்: அருவருப்பான;

கொடியன் ஏதும் ஓராது விரக சாலமே மூடு குடிலின் மேவியே நாளும் மடியாதே

 

ஓராது: ஆராயாது; விரக: ஆசை; சாலமே: ஜாலமே; குடில்: உடல்;

குலவு தோகை மீது ஆறு முகமும் வேலும் ஈராறு குவளை வாகும் நேர் காண வருவாயே

 

வாகு: புயம்;

படியினோடு மா மேரு அதிர வீசியே சேட பணமும் ஆடவே நீடு வரை சாடி

 

படி: பூமி; சேட: ஆதிசேடனுடைய; பணம்: மணியை உடையதாகிய படம்; நீடு வரை: நீண்ட, பெரிய மலை;

பரவை ஆழி நீர் மோத நிருதர் மாள வான் நாடு பதி அது ஆக வேல் ஏவும் மயில் வீரா

 

பரவை: கடல், பரந்த; ஆழி: கடல்; நிருதர்: அரக்கர்;

வடிவு உலாவி ஆகாசம் மிளிர் பலாவின் நீள் சோலை வனச வாவி பூ ஓடை வயலோடே

 

வடிவு உலாவி: அழகு விளங்கி; வனச(ம்): தாமரை; வாவி: குளம்;

மணி செய் மாட மா மேடை சிகரமோடு வாகு ஆன மயிலை மேவி வாழ் தேவர் பெருமாளே.

 

மணிசெய்: அழகுள்ள; சிகரம்: உச்சி, மாடங்களின் உச்சி;

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/277318289&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"><strong>கடிய வேக மாறாத விரத சூதர் ஆபாதர்</strong> ... மாறாத கடுமையான கோபத்தையே விரதமான உடைய வஞ்சகர்களும், கீழ்மையான குணமுள்ளவர்களும்;</p><p align="justify"><strong>கலக மேசெய் பாழ்மூடர்</strong> ... கலகத்தையே விளைவிக்கின்ற, பாழான அறிவிலிகளும்;</p><p align="justify"><strong>வினைவேடர்</strong> ... தீவினைகளேயே விரும்புபவர்களும்;</p><p align="justify"><strong>கபட ஈனர்</strong> ... வஞ்சனையுள்ளவகளும்; இழிந்த(வர்களுமான இவர்களுடைய),</p><p align="justify"><strong>ஆகாத இயல்பு நாடியே</strong> ...ஆகாத தன்மைகளையே விரும்பிக்கொண்டு,</p><p align="justify"><strong>நீடு கன விகாரமே பேசி</strong> ... பெரியதும் வலியதுமான அருவருக்கத் தக்கவற்றையே பேசி;</p><p align="justify"><strong>நெறி பேணாக் கொடியன்</strong> ... நல்ல நெறியைக் கடைப்பிடிக்காதவனான நான்,</p><p align="justify"><strong>ஏதும் ஓராது</strong> ... எதையும் ஆராயாமல், </p><p align="justify"><strong>விரக சாலமேமூடு குடிலின்</strong> ... ஆசைகளின் ஜாலங்களால் மூடப்பட்டுள்ள குடிசையான (இந்த உடலில்),</p><p align="justify"><strong>மேவியே நாளு மடியாதே</strong> ... இருந்தபடியே தினமும் அழிவடைந்திடாமல்;</p><p align="justify"><strong>குலவு தோகை மீது ஆறு முகமும் வேலும்</strong> ... விளங்குகின்ற மயிலின்மேல் ஆறு முகங்களையும், வேலையும்,</p><p align="justify"><strong>ஈராறு குவளை வாகும்</strong> ... குவளை மலர்மாலையை அணிந்த பன்னிரண்டு தோள்களையும்,</p><p align="justify"><strong>நேர்காண வருவாயே</strong> ... (அடியேன்) நேரில் கண்டு தரிசிகும்படியாக என்னெதிரே வரவேண்டும்.</p><p align="justify"><strong>படியி னோடு மாமேரு அதிர வீசியே</strong> ... பூமியும் பெரிய மேருமலையும் அதிரும்படியாக (வேலை) வீசிய,</p><p align="justify"><strong>சேடபணமும் ஆடவே நீடுவரைசாடி</strong> <strong>பரவை யாழி நீர்மோத</strong>... ஆதிசேடனின் நாகத்தின் மணியை உடையதாகிய பணாமகுடங்கள் அசையும்படியாக பரந்த கடலானது பெரிய மலைகளின்மேல் தன் அலையை மோதி(க் கொந்தளிக்கும்படியாக)வும்;</p><p align="justify"><strong>நிருதர் மாள வானாடு பதியதாக</strong> ... அசுரர்கள் இறக்கும்படியாகவும்; தேவர்கள் தங்களுடைய தேவலோகத்தில் மீண்டும் குடியேறும்படியாகவும்;</p><p align="justify"><strong>வேலேவு மயில்வீரா</strong> ... வேலாயுதத்தை ஏவிய மயில் வீரனே, </p><p align="justify"><strong>வடிவுலாவி யாகாச மிளிர்</strong> <strong>பலாவின் நீள்சோலை</strong>... அழகு விளங்கும்படியாக ஆகாயம் வரையிலே வளர்ந்தோங்கி மிளிர்கின்ற பலாமரங்களின் பெரிய சோலைகளும்;</p><p align="justify"><strong>வனச வாவி பூவோடை வயலோடே</strong> ... தாமரைக் குளங்களும்; மலர்கள் நிறைந்த ஓடைகளும்; வயல்களும்;</p><p align="justify"><strong>மணிசெய் மாட மாமேடை சிகரமோடு</strong> ... அழகுநிரம்பிய மாடங்களும் சிறந்த மேடைகளும் கோபுரங்களும்,</p><p align="justify"><strong>வாகான மயிலை மேவி வாழ்தேவர் பெருமாளே.</strong> ... கலந்து விளங்குகின்ற மயிலாப்பூரில் வீற்றிருப்பவனே!  தேவர்களுடைய பெருமாளே!</p><p align="justify"><em>சுருக்க உரை</em></p><p align="justify"><em>பூமியும் பெரிய மேருமலையும் அதிரும்படியும்; ஆதிசேடனுடைய பணா மகுடங்கள் நடுங்கி அசையும்படியும்; பரந்த கடலின் நீரானது பெரிய மலைகளின்மேல் மோதும்படியும்; தேவர்கள் தம்முடைய வானுலகிலே மீண்டும் குடியேறும்படியும் வேலைச் செலுத்தியவனே!  உயரமான பலா மரங்களும் தாமரைக் குளங்களும் நீர்ப்பூக்கள் நிறைந்த ஓடைகளும் அழகான மாடங்களும் கோபுரங்களும் நிறைந்ததான மயிலாப்பூரில் வீற்றிருப்பவனே!  தேவர்கள் பெருமாளே!</em></p><p align="justify"><em>மாறாத கடுஞ்சினத்தையே விரமாகக் கொண்டிருப்பவர்கள்; வஞ்சகர்கள்; கீழோர்கள்; தீவினைகளையே விரும்புவோர்கள் என்று இத்தகையவர்களுடைய ஆகாத தன்மைகளைப் பெரிதும் விரும்பியும்; அருவருப்பானவற்றையே பேசிக்கொண்டும்; ஆசைகளின் ஜாலத்தால் மூடப்பட்டுள்ள இந்த உடலாகிய குடிலில் நான் இருந்தபடி அழிவடைந்து போகாமல்,</em></p><p align="justify"><em>அழகிய மயிலின்மேலே ஆறு முகங்களும்; வேலும்; குவளை மலர்மாலையை அணிந்த பன்ணிரண்டு தோள்களும் அடியேன் நேரில் காணுமாறு எதிரே வந்தருள வேண்டும்.</em></p>

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com