பகுதி - 896

அவன் என்னை ஆட்கொள்ள மாட்டானா..
பகுதி - 896

‘அவன் என்னையாட்கொள்ள மாட்டானா’ என்று நாரையை விளித்துக் கேட்பதைப் போன்று அமைந்திருக்கும் இந்தப் பாடல் நாயக-நாயகி பாவத்தில் அமைந்தது; திருவாரூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்றுமுதல் ஐந்து வரையிலான எல்லாச் சீர்களிலும் இரண்டு நெட்டெழுதுகளும்; ஆறாவது சீரில் ஒரு நெடில், ஒரு குறில் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என இரண்டெழுத்துகளும் அமைந்துள்ன.

தானா தானா தானா தானா

      தானா தானத்                       தனதான

கூர்வாய் நாராய் வாராய் போனார்

         கூடா ரேசற்                      றலஆவி

      கோதா னேன்மா தாமா றானாள்

         கோளே கேழ்மற்                 றிளவாடை

ஈர்வாள் போலே மேலே வீசா

         ஏறா வேறிட்                     டதுதீயின்

      ஈயா வாழ்வோர் பேரே பாடா

         ஈடே றாரிற்                      கெடலாமோ

சூர்வா ழாதே மாறா தேவாழ்

         சூழ்வா னோர்கட்                 கருள்கூருந்

      தோலா வேலா வீறா ரூர்வாழ்

         சோதீ பாகத்                      துமையூடே

சேர்வாய் நீதீ வானோர் வீரா

         சேரா ரூரைச்                    சுடுவார்தஞ்

      சேயே வேளே பூவே கோவே

         தேவே தேவப்                    பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com