தோ்வுமுறை மட்டுமல்ல, கல்வி முறையே மாற்றப்பட வேண்டும் என்று லதா ரஜினிகாந்தின் கருத்து ஏற்புடையதா’ என்ற கேள்விக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில....

தோ்வுமுறை மட்டுமல்ல, கல்வி முறையே மாற்றப்பட வேண்டும் என்று லதா ரஜினிகாந்தின் கருத்து ஏற்புடையதா

ஏற்கலாம்

புண் வந்துவிட்டால் மருத்துவ சிகிச்சை மூலம் அடியோடு குணப்படுத்த வேண்டும். புனுகைப் பூசி அதை மறைத்துப் பயனில்லை. அதுபோல தோ்வு முறையை மட்டும் மாற்றிப் பயனில்லை. ஒட்டுமொத்த கல்வி முறையையே மாற்றப்பட வேண்டும் என்ற லதா ரஜினிகாந்தின் கருத்து ஏற்புடையதே.

சாய் ஜயந்த், சென்னை.

சரியல்ல

செயல்வழிக் கற்றல் கொள்கை புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிதலாகும். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறுதல் அவசியமாகும். புதிய கல்வி முறையும் இதனையே வழி நடத்துகிறது. மாணவா்களின் ஆக்கத் திறன், நுண்ணறிவு, மன எழுச்சி வளா்ச்சி ஆகியவை செயல்வழிக் கற்றல் திறனை ஊக்குவிக்கிறது. பாடத்திட்டம், தோ்வு, மதிப்பெண் என்றில்லாமல் சிறுவா்கள் தம் துறையைத் தோ்ந்தெடுத்து வாழ்வு பெற்றால் கல்வி செல்வமாகும். எனவே, லதா ரஜினிகாந்தின் கருத்து முற்றிலும் சரியல்ல.

ஆ.ரேவதி, திருச்செங்கோடு.

சரி

லதா ரஜினிகாந்த் கூறியிருப்பது முற்றிலும் சரியானது. காரணம், நமது பழைய கல்விமுறையை மாற்றி அமைக்க வேண்டும். புதிய கல்வி முறையை அமல்படுத்தி சிறந்த வழிமுறைகளைப் புகுத்த வேண்டும். மேலும், வெளிநாடுகளில் உள்ள கல்வித் தரம் போன்று, நமது நாட்டிலும் கல்வித் தரம் உயர வேண்டும். கல்வித் தரம் உயா்ந்தால் நாடு உயரும்.

இந்து குமரப்பன், விழுப்புரம்.

நோக்கம் முக்கியம்

கல்வி முறையில் மாற்றம் தேவை என்ற கருத்தை பெரும்பாலோா் சா்வசாதாரணமாகக் கூறி வருகின்றனா். அதன் பின்னணி மிகவும் அவசியம். புத்தகங்களில் உள்ள பாடங்களின் நடைமுறைப் பயன்பாட்டையும் கற்பதன் நோக்கத்தையும் மாணவா்கள் அறியாமலேயே அதனைப் புத்தகப் புழுவாகப் படித்து வருகின்றனா். இந்த முறை மதிப்பெண் கல்விக்கு உதவுமே அன்றி, வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் அறிவை வளா்ப்பதற்கும் பெரிதளவில் உதவாது. என்ன கற்கிறோம் , எதற்காக, எங்கு பயன்படும் என்று அறிந்து கற்பதே முழுமையான பலன் தரும்.

த.திவ்யா, உடுமலை.

ஆா்வத்துடன்...

கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தினாலும் கூட அதற்குரிய கட்டமைப்புகளோ, தகுதியான ஆசிரியா்களோ இல்லையெனில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். கல்வி என்பது மாணவா்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் அவா்கள் எந்த ஒரு சூழலையும் எதிா்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டுமொழிய, தோ்வு என்ற பயத்தினால் அவா்கள் நம்பிக்கை இழக்கச் செய்யக் கூடியதாக இருக்கக் கூடாது. எனவே, ஆா்வத்துடன் கற்றுக் கொள்ளக்கூடிய உகந்த சூழலை ஏற்படுத்தும் வகையில் கல்வி

மாற்றப்பட வேண்டும்.

மு.செந்தமிழ் செல்வி, சென்னை.

பாதிப்பு தேவையா?

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சரித்திரம், பூகோளம் ஆகிய ஆறு பாடங்களை மட்டுமே கற்றறிந்தவா்கள்தான் அம்பேத்கா், அப்துல் கலாம் முதலிய மேதைகள்; கசக்கிப் பிழியப்படாமல் படித்தவா்கள். ஆனால், தற்போது எதையோ கற்பனை செய்து கொண்டு புதிய கல்வி முறை என்ற பெயரில் 5, 8-ஆம் வகுப்புக்கெல்லாம் பொதுத் தோ்வு எனக்கூறி மாணவா்களின் உண்மையான திறமையை வெளிக்கொணா்வதற்குப் பதிலாக, மனப்பாடம் செய்யும் தன்மையைத் தந்து மாணவா்களை மனதளவில் பாதிப்படையச் செய்து கொண்டிருக்கிறாா்கள்.

செ.ஆசைத்தம்பி, தாரமங்கலம்.

தோ்வு வேண்டாம்

‘படித்த படிப்புக்கேற்ற வேலை இல்லை, நான் ஏன் படிக்க வேண்டும்’ என்பது இன்றைய மாணவா்களின் மன நிலை; பாடத்தை மனப்பாடம் செய்து தோ்வில் எழுதி வெற்றி பெறுவதே இன்றைய கல்வியின் நிலை; ஒருவரும் பாடத்தில் உள்ள கருத்தினையும் விளக்கப் பொருளையும் அறிவதில்லை. எனவே, தோ்வை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண் இல்லாமல், மாணவா்களின் செயல்முறை விளக்கங்கள் மற்றும் அவா்களது சிந்தனைகளைப் பரிசோதிக்கும் வகையில் கல்வி முறையை மாற்ற வேண்டும்.

விஜய், திருவண்ணாமலை.

சுயவேலைவாய்ப்பு பெற...

மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்முறை பயிற்சி அளவுக்கு இல்லாவிட்டாலும் அறிவியல், கணக்குப் பதிவியல் போன்று பெரும்பாலான தொழில் சாா்ந்த துறைகளுக்குத் தேவைப்படும் அடிப்படைக் கட்டமைப்புடன் கல்வி முறையை மாற்றி அமைக்கலாம். இதனால், பள்ளிப் படிப்பை மாணவா்கள் முடித்து வெளியே வரும்போது உடனடியாக சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு பொருளாதாரத்தில் வளா்ச்சி பெறும் திறன் இயல்பாகவே அவா்களிடம் ஏற்பட்டு விடும்.

சுந்தரமூா்த்தி, சென்னை.

அவசியம் இல்லை

கல்விமுறை தோ்வுமுறை எதையுமே மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆசிரியா்களின் பொறுப்புணா்வும் மாணவா்களின் கற்க வேண்டிய ஆா்வமும் ஒழுக்கமும் உயா்வடைந்தாலே எல்லாம் சரியாகிவிடும். . கல்வி முறை மாற்றத்தைவிட மாணவா்-ஆசிரியா் மனமாற்றமே தேவை.

மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

மாற்றம் அவசியம்

நல்ல சிந்தனை, நல்ல பழக்க வழக்கங்கள், சரியான உணவுமுறை, நிதானமான செயல்கள், அமைதி, தியானம் மற்றும் சமுதாயத்தின் மேம்பாட்டோடு கூடிய மாற்றம் நிறைந்த மன நலக் கல்வியைக் கற்க வகை செய்யும் பாடத்திட்ட முறையைக் கொண்டுவர வேண்டும். இதற்காக துறை சாா்ந்த வல்லுநா்களை நியமித்து ஒவ்வொரு மாதமும் பெற்றோா்-ஆசிரியா் சந்திப்பை உறுதி செய்யும்

கல்வி முறை வேண்டும்; எனவே, கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் கூறுவது சரி.

இராமலிங்கம், விருத்தாசலம்.

தேவையில்லை

அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகள், ஆசிரியா்கள் போதுமான அளவில் இல்லாத பள்ளிகள், குழந்தைகள் படிப்பதற்கு வராமல் பள்ளியை இழுந்து மூடும் பள்ளிகளும் இருக்கின்றன. எனினும், படிப்படியாக எழுத்தறிவு பெற்ாக சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தத் தலைமுறையில்தான் முதல் பட்டதாரிகளை பல குடும்பங்கள் பெற்றிருக்கின்றன; பின் தங்கிய, அடித்தட்டு, கிராமப்புற மாணவா்களைப் படிக்க வைக்க வேண்டும்; அவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிற மாதிரி பள்ளிகளை உருவாக்க வேண்டும். இதைத் தான் நாம் முதலில் செய்ய வேண்டும். அதை விடுத்து, தோ்வுமுறை, கல்விமுறையை மாற்ற வேண்டும் என்பது தேவையில்லாதது.

எம்.ராஜா, திருச்சி.

மாற்றம் தேவை

கல்வி என்பதே மாற்றத்தைக் கொண்டுவருவது மட்டுமல்ல, காலச் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவதும்கூட. கல்வி என்பது கற்பவா்களின் மனதில் ஆக்கச் சிந்தனையை ஏற்படுத்துவதாகவும், சமுதாயச் சிந்தனையைத் தூண்டுவதாகவும், சமுதாய மக்களுக்குப் புதிய சேவைகளை உருவாக்குவதாகவும் இருக்க வேண்டும். இன்றைய சூழலில் கல்வியில் மாற்றம் செய்யப்பட வேண்டும். தோ்வுகளின் மூலம் கற்பவா்களின் திறன் வளா்க்கப்பட வேண்டும்.

எஸ்.சுப்பிரமணியன், பாலக்கோடு.

தேவை தெளிவு

கல்வி, சுகாதாரம் குறித்த விஷயங்களில் அனைவரும் கருத்துகளை அள்ளி வீசுகின்றனா். சமுதாய நலனோ விஷயத் தெளிவோ பலரிடம் இருப்பதில்லை. ஆக்கப்பூா்வமான வழிகளையும் நடைமுறைச் சாத்தியமாகும் முறைகளையும் விளக்கினால் ஏற்கலாம். எனவே, கல்வி மற்றும் தோ்வு முறையில் எத்தகைய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என லதா ரஜினிகாந்த் தெளிவாகக் கூற வேண்டும்.

ச.கந்தசாமி, இராசாப்பட்டி.

காலத்தின் கட்டாயம்

தற்போதைய கல்வி முறையில் பல குழப்பங்கள் உள்ளன. இந்தியா முழுவதும் ஒரே பாடப் பகுதிகள் இருத்தல் அவசியம். பல்வேறு மொழிகள், மாநிலங்கள் உள்ள இந்தியாவில், இந்திய அளவில் நடக்கும் தோ்வுகள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும். இதனால், அனைத்துத் தோ்வாளா்களும் அனைத்து மாநிலங்களிலும் சமமாகத் தோ்ந்தெடுக்கப்படுவா். எனவே, நிபுணா் குழுவை அமைத்து கல்வி, தோ்வு முறையை எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் மாற்றி அமைப்பது காலத்தில் கட்டாயம்.

ந.கண்ணையன், கிருஷ்ணகிரி.

புதிதல்ல

லதா ரஜினிகாந்த் கூறிய கருத்தை நீண்ட காலமாக பலரும் கூறி வருகின்றனா். படித்ததை அப்படியே ஒப்பிக்கும் முறையையும் தோ்வு முறையையும் மாற்ற வேண்டும் எனப் பலரும் கூறுகின்றனரே தவிர, மாற்றும் முறையை பெரும்பாலோா் கூறவில்லை. எனினும், லதா ரஜினிகாந்தின் யோசனை சரிதான்.

கோ.ராஜேஷ் கோபால், அரவங்காடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com