நதிக்கரை குணிந்து
இரு கை சேர்த்து
அள்ளிப்பருகினேன்.
நதிக்கரை நின்று
இருகால் நனைய
அக மகிழ்ந்தேன்.
வருடங்கள் பல ஓட
ஊர்திரும்பிய ஆசையில்
ஓடும் நதியை தேடினேன்
ஓடையாய் நதி மாறிப்போக..
மூன்று குச்சிகள் நட்டு
பேட்டும் பாலுமாய்
ஆங்காங்கே ஓலங்கள்.
ஏய்...பெருசு தள்ளிநில்லு
*டேய்...!*
பால போடுடா!
ஐபிஎல் ஜூரம் பறக்க
நதியின்
நினைவலைகள்...