கருவில் உருவான உயிரினங்கள்
ஆறறிவில் வித்தியசப்பட்ட மனிதர்கள்
நல்லதும் கெட்டதும் அறியா இளமை காலங்கள்
வந்ததே வஞ்சகம் காலத்தின் போக்கினிலே
புரியாத புதிராய் தொற்றுநோயாய் பரவி விட்டதே
பள்ளி பருவத்தே வஞ்சகம்;
கல்லூரி கனவுகளிலும் வஞ்சகம்;
காதல் கனிரசங்களில் வஞ்சகம்;
கட்டிய மனைவியிடம் வஞ்சகம்;
அலுவலக உடன் பிறவா நண்பர்களிடம் வஞ்சகம்;
அக்கம் பக்கம் தெரு வாசிகளிடம் வஞ்சகம்
வஞ்சகப்போட்டியினிலே யாருக்கு முதலிடம் ?
உற்றார் உறவினர் நாவினிக்க பேசி
நயவஞ்சகம் செய்வாரே அஃதன்றோ
உயிரோடு ஒட்டிய வஞ்சகம்