அருகும் சுவடும் தெரிவுஉணரோம், அன்பே
பெருகும் மிக, இது என்? பேசீர், பருகலாம்
பண்புஉடையீர்! பார்அளந்தீர்! பாவியேம் கண் காண்புஅரிய
நுண்புஉடையீர் நும்மை நுமக்கு.
எம்பெருமானே, அள்ளிப் பருகுவதற்கு ஏற்ற நற்குணங்களைக் கொண்டவரே, இவ்வுலகை அளந்தவரே, எங்களைப்போன்ற பாவிகளுடைய கண்களில் தென்படாத அளவு நுட்பமானவரே,
உங்களை எங்கே நெருங்குவது, எப்படி நெருங்குவது, அதற்கான வழி என்ன என்றெல்லாம் எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், உங்களை நினைத்தாலே போதும், உங்களை நெருங்கிவிட்டதுபோல் மனத்தில் அன்பு மிகுதியாகப் பெருகுகிறது. அது எப்படி? சொல்லுங்கள்.