முதற்பத்து மூன்றாம் திருவாய்மொழி - 3

சிறந்த படைத்தல், அழித்தல் போன்ற

அமைவுஉடை அறநெறிமுழுவதும் உயர்வுஅற உயர்ந்து
அமைவுஉடை முதல்கெடல் ஓடி விடை அறநிலம் அதுவாம்
அமைவுஉடை அமரரும் யாவையும் யாவரும்தானாம்
அமைவுஉடை நாரணன் மாயையை அறிபவர் யாரே?

சிறப்புடைய (பிரம்மன் முதலான) தேவர்கள் எல்லாரும், சிறப்புநிறைந்த அறநெறிகள் அனைத்தையும் நன்கு அறிந்து, இதில் இவர்களைவிட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்னும்படி உயர்ந்து, சிறந்த படைத்தல், அழித்தல் போன்ற செயல்களைச் செய்கிறார்கள், ஆனால், அந்தத் தேவர்கள், அஃறிணைப்பொருள்கள், மற்ற உயிர்கள் என அனைத்தும் தானாகவே அமைந்திருக்கும் நாராயணனின் மாயையை அறிந்தவர்கள் யார்? (ஒருவரும் இல்லை.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com