முதற்பத்து மூன்றாம் திருவாய்மொழி - 4

எளிய பக்தர்கள் அவனை வணங்கினால்

யாரும் ஓர் நிலைமையன் என அறிவுஅரிய எம்பெருமான்,
யாரும் ஓர் நிலைமையன் என அறிவுஎளிய எம்பெருமான்,
பேரும் ஓர் ஆயிரம், பிற பல உடைய எம்பெருமான்,
பேரும் ஓர் உருவமும் உளது இல்லை, அலது இல்லை பிணக்கே.

எப்பேர்ப்பட்ட ஞானிகளானாலும் சரி, இவன் இப்படிப்பட்டவன் என அறிந்துகொள்ள இயலாதவன் எம்பெருமான்,

அதேசமயம், எளிய பக்தர்கள் அவனை வணங்கினால் அவனது தன்மையை அறியலாம், அவனும் அவர்களுக்கு எளியவனாகி அருள்செய்வான்,

ஆயிரம் திருப்பெயர்களையும் திருமேனிகளையும் கொண்ட எம்பெருமானுக்குப் பெயருண்டு, உருவம் உண்டு என்பவர்கள் சிலர், பெயரில்லை, உருவமில்லை என்பவர்கள் சிலர், இந்த விவாதம் என்றைக்கும் தொடரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com