பத்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 2

மேகங்கள் மகிழ்ந்தன
பத்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 2

பாடல் 2

நாரணன் தமரைக் கண்டு உகந்து நல் நீர் முகில்
பூரண பொற்குடம் பூரித்தது உயர் விண்ணில்,
நீர் அணி கடல்கள் நின்று ஆர்த்தன, நெடு வரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகரே.

நாரணன் பக்தர்களைக் கண்டு நல்ல நீர் மேகங்கள் மகிழ்ந்தன, அந்தக் காட்சி, உயர்ந்த வானத்தில் பூரணப் பொற்குடத்தை நிரப்பிவைத்ததைப்போலிருந்தது. நீரை அணிந்த கடல்கள் பக்தர்களைக் கண்டு ஆரவாரம் செய்தன, எங்கு பார்த்தாலும் பெரிய மலைகளை வரிசையான தோரணங்களாக நிறுத்திவைத்து உலக மக்கள் தொழுதார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com