பாடல் 10
விதிவகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்,
நிதியும், நல் சுண்ணமும், நிறை குட விளக்கமும்
மதிமுக மடந்தையர் ஏந்தினர் வந்தே.
வேதங்களிலே கூறப்பட்ட நித்தியசூரிகள், எம்பெருமான் அடியவர்களைக் கண்டு, ‘நம்முடைய பாக்கியத்தாலே இவர்கள் இங்கே வந்தார்கள்’ என்று மகிழ்ந்தார்கள், தங்கள் இடங்களில் செய்யப்படவேண்டிய முறைப்படி அவர்களுடைய பாதங்களைக் கழுவினார்கள், சந்திரனைப்போன்ற முகத்தையுடைய பெண்கள், நிதி எனப்படும் திருவடிநிலைகள், நல்ல வாசனைப்பொடி, நிறைந்த குடங்கள், விளக்குகளை ஏந்திவந்தார்கள்.