சாகித்திய அகாதெமி, அய்யா மாரியப்பனார் - சுந்தராம்பாள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் "அண்மைக் கவிகளின் படைப்பிலக்கியங்களில் நாட்டுப்புறவியல்' இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: புதுவை யுகபாரதி; பங்கேற்பு: புதுவை தாசன், இ.பட்டாபிராமன், புதுவை இளங்குயில்; வி.குருசாமி நாடார் - இருளாயம்பாள் வளாகம், ஜீவானந்தபுரம் நாடார் உறவின்முறை சங்கம், புதுச்சேரி; 23.9.19 மாலை 6.00.
இலக்கிய வளர்ச்சிக் கழகம் நடத்தும் இலக்கிய - இலக்கணத் தொடர் கருத்தரங்கம். தலைமை: கோ.குமார் சொக்கப்பா; பங்கேற்பு: கலைபாரதி ; வெங்கடேசுவரா உதவிபெறும் தொடக்கப்பள்ளி, திரு ஆரூரான் திருமண மண்டபம் அருகில், திருவாரூர்; 24.9.19 மாலை 6.30.
சாகித்திய அகாதெமி, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் "மகாத்மா காந்தியும் தமிழ் இலக்கியமும்' - கருத்தரங்கம். 26.9.19 காலை 10.00 மணிக்குத் தொடக்கம்; பங்கேற்பு: எம்.சுந்தரவடிவேலு, சிற்பி பாலசுப்பிரமணியம், அ.மார்க்ஸ், டி.செல்வராஜ், பா.ஆனந்தகுமார், திருப்பூர் கிருஷ்ணன், சு.வேணுகோபால், இரா.விச்சலன், ந.முருகேசபாண்டியன்; 27.9.19 காலை 10.00 மணிக்குத் தொடக்கம்; பங்கேற்பு: க.காசிமாரியப்பன், ஓ.முத்தையா, கடற்கரய், எம்.அப்துல்சமது, சு.இரவிக்குமார், வி.பி.ஆர்.சிவக்குமார், மா.வில்லியம் பாஸ்கரன், வீ.நிர்மலா ராணி ; கருத்தரங்கக் கூடம், குருதேவர் தாகூர் கட்டிடம், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்.
அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம், சிலம்பொலி செல்லப்பனார் சிலப்பதிகார அறக்கட்டளை இணைந்து நடத்தும் முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பனார் 92-ஆவது பிறந்தநாள் விழா அழைப்பிதழ்.தலைமை: நீதியரசர் ஆர்.மகாதேவன்; பங்கேற்பு: கோ.விசுவநாதன், ஈரோடு தமிழன்பன், வி.ஜி.சந்தோஷம், மறைமலை இலக்குவனார், செ.வ.இராமாநுசன் ; இராணி சீதை அரங்கம், 603, அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, சென்னை-6 ; 26.9.19 மாலை 5.00.
நேரு நினைவுக் கல்லூரி தமிழ்த்துறை இலக்கிய வட்டம் நடத்தும் "புதுக்கவிதை ஒரு பொதுப்பார்வை' கவிதைப் பயிலரங்கம். தலைமை: அ.ரா.பொன் பெரியசாமி; பங்கேற்பு: மு.மேத்தா, நெல்லை ஜெயந்தா, ஆ.குமாரவேல், கு.சீனிவாசன், சோம.இராசேந்திரன், க.சிவகுருநாதன், சா.நீலகண்டன், ச.பிரபாகரன்; கல்லூரிக் கருத்தரங்கக் கூடம், நேரு நினைவுக் கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி மாவட்டம் ; 27.9.19 காலை 9.30.
சாகித்திய அகாதெமி நடத்தும் "ப்ரவாஸி மஞ்ச்' இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு: ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்; சாகித்திய அகாதெமி, 443, இரண்டாம் தளம், குணா வளாகம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18; 27.9.19 மாலை 5.30.
திருவொற்றியூர் பாரதி பாசறை நடத்தும் திருப்புகழ் தொடர் சொற்பொழிவு. தலைமை: ப.சூரியநாராயணன்; பங்கேற்பு: மா.கி.இரமணன்; ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, 39/25, கிராமத் தெரு, திருவொற்றியூர், சென்னை-19; 29.9.19 காலை 10.00.